Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 20:55:59 Hours

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் வழங்கி வைப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருக்கும் கொவிட் -19 தொற்றாளர்களின் அவசர பயன்பாட்டிற்காக ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

4 வது இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சிந்தன குமார அவர்களினால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பி.திலீபன் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (05) கையளிக்கப்பட்டது.

மேற்படி விநியோகத் திட்டம் யாழ். பாதுகாப்பு படைத் தளபதியும் யாழ். மாவட்ட கொவிட் - 19 பரவல் தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி கொவிட் – 19 நோயாளர்களுக்கான ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் இலங்கை அமெரிக்க மன்றத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டவையாகும்.