Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2021 23:41:59 Hours

வணக்கஸ்தளங்கள் இரண்டிற்கு படையினரால் நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேடின் கீழுள்ள 7 வது இலங்கை பீரங்கிப் படையின் சிப்பாய்களால் 100,200.00 ரூபாய்கள் பெறுமதியான உலர் நிவாரண பொதிகள் திம்புலாகல ஆராண்மை மற்றும் அரலகங்வில ஆரியதம்ம ஆராண்மை ஆகிய வணக்கஸ்தளங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிவாரண பொதிகள் 7 வது இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரியந்த கரவிட்ட அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரு பண்டுக்க பத்மபெரும மற்றும் அவரது குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களுடன் இணைந்து திரு பண்டுக்க பத்மபெரும மற்றும் திரு டபிள்யூஎல்எஸ் விக்கிரமசிங்க, திரு டபிள்யூ.ஏ.எஸ்.பி.ஹெட்டியராச்சி, செல்வி தாரிணி தேவி, திருமதி டபிள்யூ.எஸ்.எஸ்.பீ.விக்கிரமசிங்க, திருமதி டபிள்யூ.எஸ்.எஸ்.எஸ். விக்கிரமசிங்க, திரு டபிள்யூ.எஸ்.எஸ்.டி. விக்கிரமசிங்க மற்றும் திரு பீடி துஷித குமாரசிறி உள்ளிட்ட குழுவினரால் மேற்படி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 233 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி , 7 வது இராணுவ பீரங்கி படையின் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்