Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2021 10:00:32 Hours

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியை தளமாக கொண்ட படையினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (14) கிளிநொச்சி பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பித்தனர்.

கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு தலைமையகத்தில் பதில் நடவடிக்கை படை தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் நிலம் ஹேரத், 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படை அதிகாரிகள், 5 வது இலங்கை பொலிஸ் படை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலையின் இராணுவ தலைமை மருத்துவ அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினால் நடமாடும் தடுப்பூசி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.