Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th September 2021 16:00:11 Hours

இராணுவ தலைமையக ஒழுங்கு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பிரிகேடியர் லக்‌ஷ்மன் பமுனுசிங்க இராணுவ தலைமையகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பணிப்பகத்தின் 13 வது பணிப்பாளராக திங்கள்கிழமை (13) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது புதிய தளபதி மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

புதிய தளபதிக்கு முன்னதாக மேற்படி நியமனத்தை வகித்த பிரிகேடியர் அனில் இளங்ககோன் தற்போது முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலையத் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் ஒழுங்கு நடவடிக்கை பணிப்பகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் லக்ஷ்மன் பமுனுசிங்க புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிருவாக மற்றும் விடுதி நியமனத்தை வகித்தார்.