Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2021 18:00:02 Hours

பொறியியல் சேவை படையணியின் புதிய தளபதியாக பிரிகேடியர் சாந்த குமார கடமைகளை பொறுப்பேற்றார்

பொறியியல் சேவை படையணியின் 13 வது தளபதியாக பிரிகேடியர் சாந்த குமார பனகொடவில் உள்ள பொறியாளர் சேவை படையணியின் தலைமையகத்தில் சனிக்கிழமை (11) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த போது தளபதிக்கு பொறியல் சேவை படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் எஸ்.என் கிதுலுகொட அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் போர்க்கலத்தில் உயிர் நீத்த பொறியியல் சேவைப் படையின் சிப்பாய்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனையடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பிரிகேடியர் சாந்த குமார அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

இந்நிகழ்வில் பொறியியல் சேவை படையணியின் தளபதி கடமைகளை பொறுப்பேற்றதை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

நிகழ்வின் நிறைவம்சமாக இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி உரையொன்றினையும் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.