09th September 2021 21:00:19 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சமூக பணித் திட்டங்களை மேம்படுத்தும் விதமாக புதன்கிழமை (08)மஹாகனதாராவாவில் வசிக்கும் திருமதி கே இந்திராணி மல்லிகா என்பவருக்கான புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பில் வசிக்கும் பேரா.விஜேவர்தன அவர்களின் நன்கொடையை கொண்டு குறைந்த வருமானம் பெற்று வரும் குடும்பத்தின் 7 பிள்ளைகளுக்கு தாயான பெண்னொருவரின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி வீட்டின் நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
21 வது படைப்பிரிவு தலைமையகத்தின் வழிகாட்டலின் 211 வது பிரிகேடின் கீழ் 2 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்களினால் வீட்டின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.
211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்சீஎஸ்கே செனவிரத்ன, 211 வது பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 2 வது (தொ) விஜயபாகு காலாட்படையணியின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.