09th September 2021 14:30:18 Hours
வன்னியில் உள்ள போகஸ்வெவ I மற்றும் போகஸ்வெவ II கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 குடும்பங்களுக்கு சப்புமல்கஸ்கட விகாரையின் மகாநாயக்க தேரர் வண. கல்கமுவே சாந்தபோதி தேரர் வழங்கிய நிதி உதவியை கொண்டு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 56 வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஸிரி பெரேராவின் ஒருங்கிணைப்பில் ஞாயிற்றுக்கிழமை (5) மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
563 வது பரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா மற்றும் 7 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஏ.ஜே.எம்.பெரேரா ஆகியோரால் மேற்படித் திட்டம் கண்காணிக்கப்பட்டது.