10th September 2021 23:30:55 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி நியமனத்தை வகித்த இலங்கை இராணுவ போர்கருவி படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஷிராந்த திசாநாயக்க அவர்கள் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு வெள்ளிக்கிழமை (10) அவரை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்கு அழைப்பித்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறும் தளபதியுடனான சந்திப்பின் போது அவரது மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அர்ப்பணிப்புடன் சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். அத்தோடு முன்னை நினைவுகளையும் மீட்டிப்பார்த்தனர். அதனையடுத்தி இலங்கை இராணுவ போர்கருவி படையினை மேம்படுத்துவதற்கான அவர் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த இராணுவ தளபதி எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஷிரந்த திசாநாயக்க இராணுவம் மற்றும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியில் பல முக்கிய நியமனங்களில் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து தனது சேவைக்காலத்தில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவ தளபதி வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்ட ஓய்வு பெறும் அதிகாரிக்கு இராணுவ தளபதி பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிறப்பு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார். .