07th September 2021 17:10:44 Hours
வாகரைப் பகுதியில் வசிக்கும் திருமதி கணேசன் ஜனேஸ்வரி அவர்களின் மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கையை ஏற்று, வட.கிழக்கு பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பாக அவரது வீட்டின் ஓரளவு சேதமடைந்த கூரையை சீரமதை்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 படைப்பிரிவின் கீழுள்ள 233 பிரிகேட் சிப்பாய்களால் இரண்டு நாட்களுக்குள், சேதமடைந்த கூரை சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை (06) உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.