02nd September 2021 13:00:11 Hours
யக்கல ரணவிரு ஆடை தொழிற்சாலையின் (RVAPL) புதிய தங்குமிட விடுதி கட்டிடம் பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானியும் ரணவிரு ஆடை தொழிற்சாலை முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மடோல அவர்களினால் புதன்கிழமை (01) யக்கல ரணவிரு ஆடை தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் ஆசாத் இஸதீன் அவர்களின் அழைப்பின் பேரில் திறந்து வைக்கப்பட்டது.
ரணவிரு ஆடை தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் ஆசாத் இஸதீனின் ,பிரதி தளபதி பிரிகேடியர் அமில வாஸகே மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதன் பின்னர் பிரதம அதிதி மத அனுஸ!டனங்களுக்கு மத்தியில் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நீண்ட கால தேவையாக காணப்பட்ட விடுதி திட்டம் 2021 ஜூலை மாதம் 08 ம் திகதி பிரிகேடியர் ஆசாத் இசதீன் அவர்களின் அழைப்பிலன் பேரில் மேஜர் ஜெனரல் வசந்த மடோலவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆடைத் தொழிற்சாலையின் தளபதி மற்றும் பிரதி தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் திட்ட அதிகாரி மேஜர் திலக் ஜயக்கொடியின் மேற்பார்வையில் 42 நாட்களுக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டது.
4 மாதங்களுக்குள் முடிக்கப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டமானது 4 வது பொறியியல் படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்டது. பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானியின் வருகையின் போது இராணுவ மரபுகளுக்கு ஏற்ப வாகன தொடரணிக்கு பாதுகாவலர் மரியாதை வழங்கப்பட்டது.
இதன் போது பொறியியலாளர் சேவைகள் படையினர் மற்றும் ரணவிரு ஆடை தொழிற்சாலை படையினருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர் திட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக தளபதி மற்றும் ஆடைத் தொழிசாலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து சிப்பாய்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தொழிற்சாலையின் வெற்றிகளை பாராட்டி சிறப்பு விருதை வழங்குவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார்.