Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2021 06:45:00 Hours

24 வது படைப்பிரிவு படையினர் கொவிட் - 19 குறித்து பொதுமக்கள் விழிப்புணர்விற்காய் பதாகைகள் காட்சிப்படுத்தல்

அம்பாறை மாவட்டத்தில் கொவிட் -19 வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து 24 வது படைப்பிரிவு தலைமையகம் கொவிட் -19 நோய்த்தொற்றின் அபாயங்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் பற்றிய பொது மக்களை விழிப்பூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தல் திட்டத்தை தொடங்கியது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லாமஹேவா மற்றும் 241 ஆவது பிரிகேட் தளபதி கர்னல் சந்திர அபேகோன் ஆகியோர் பிரதேச சகல மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆரவலர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் முக்கிய நகரங்களை உள்ளடக்கி இந்த திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.