17th August 2021 20:00:43 Hours
இலங்கை பொதுச் சேவைப் படையணியின் பிரிகேடியர் பிரியந்த அபேசிங்க பனகொடவில் உள்ள இராணுவ நலன்புரி நிதிய பணிப்பக அலுவலகத்தில் 11 வது பணிப்பாளராக திங்கட்கிழமை (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது மத அனுட்டானங்களுக்கு பின்னர் புதிதாக நியமனம் பெற்ற பணிப்பாளர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதை குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
மேற்படி நியமனத்தை வகித்த பிரிகேடியர் சாலியா பத்மசாந்த இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளதையடுத்தே புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு அவரது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகளும் சிப்பாய்களும் உரிய சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.