16th August 2021 22:00:03 Hours
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 12 வது படைப்பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (13) கொஸ்லந்தையிலுள்ள அளுத் வெவாவின் பொதுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கையை முற்றுகையிட்டு அழித்தனர்.
சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள காட்டுக்குள் 20 பேர்ச்சஸ் காணியில் மறைமுகமாக பயிரிடப்பட்டிருந்த மேற்படி கஞ்சா செய்கை இடத்தை கண்டறிந்த பின்னர் இது தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸாருக்கு அறிவித்த படையினர் அதனை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுகின்றனர்.