Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2021 12:15:44 Hours

542 வது பிரிகேட் பகுதியில் படையினரால் விகாரை நிர்மாணிப்பு

542 வது பிரிகேட் சிப்பாய்களால் வில்பத்து விஜயதிலக விகாரையின் மகாநாயக்க தேரர் வண விளாச்சியே விமல தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, விகாரையின் பிக்குகளுக்கான மடாலயம், பிரசங்க மண்டபம், விகாரை மணிக் கோபுரம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பிற கட்டுமான பணிகளுக்கும் உதவிகளை வழங்கினர்.

542 வது பிரிகேட் தளபதி இத்திட்டத்திற்கான ஆதரவை வழங்கியிருந்ததோடு, அவரது குடும்பத்தாருடன் இணைந்தி டிசம்பர் 6 ஆம் திகதி 2020 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

542 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.டபிள்யூ.எஸ் பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில் 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே. பண்டார அவர்களினால் அண்மையில் விகாரை மண்டபம் மற்றும் மணிக் கோபுரம் என்பன திறந்து வைக்கப்பட்டன.

திறப்பு விழாவை முன்னிட்டு அண்மித்த கிராமத்தில் வசிக்கும் குறை வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 40 உலர் நிவாரண பொதிகள் மற்றும் உணவுப் பொதிகளை 542 வது பிரிகேட் தளபதியின் நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன.

542 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.டபிள்யூ.எஸ் பெரேரா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள், அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவினர் உள்ளிட்ட பலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டனர்.