30th July 2021 10:56:28 Hours
மன்னாரிலுள்ள 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 11 வது தளபதியாக மேஜர் ஜெனரல் தர்ஷன வீஜேசேகர புதன்கிழமை (28) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தளபதி தலைமையகத்திற்கு வருகை தந்த போது 7 வது விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதுடன், 54 வது படைப்பிரிவு கேணல் பொது அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளினால் வரவேற்பளிக்கப்பட்டு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இடம்பெற்ற பௌத்த பிக்குகளின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய தளபதி அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி தனது உரையின் போது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நோக்கங்களை வெளிப்படுத்தினார்.
மேஜர் ஜெனரல் தர்ஷனா விஜேசேகர, இந்த புதிய நியமனத்திற்கு முன்னதாக பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் பிரதி தளபதியாக நியமனம் வகித்தார். கொவிட் - 19 சுகாதார ஒழுங்கு விதிகளை முறையாக பின்பற்றி சிரேஷ்ட அதிகாரிகளும் ஏனைய பதவி அணியினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஜெயநாத் பண்டார இராணுவ தலைமையக காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றதை தொடர்ந்தே மேஜர் ஜெனரல் தர்ஷன வீஜேசேகர மேற்படி புதிய நியமனத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.