Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2021 19:30:38 Hours

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமான அதிகரிப்பு

இன்று காலை (30) இலங்கையில் 2,370 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 41 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 2,329 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக கம்பஹா மாவட்டத்தில் 396 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மாவட்டத்தில் 368 பேரும் களுத்தறை மாவட்டத்தில் 220 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 1,345 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (30) வரை இலங்கையில் மொத்தம் 304,201 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 194,390 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.

இன்று (30) அதிகாலை 0600 மணி வரை 1,641 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று (30) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,463 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (30) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 459 பேர் 17 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.

ஜூலை (28) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆகும் அவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவர்.

இன்று (30) முதல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.