Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2021 15:00:03 Hours

தேவாலய வளாகம் சிரமதானம் ஊடாக சுத்தம்

515 வது பிரிகேட் படையினர் யாழ்பாணம் அளவெட்டி புனித ஜோசப் தேவாலயம் மற்றும் தையிட்டி புனித அந்தோனியார் தேவாலய வளாகங்களில் குப்பைகளை அகற்றும் பொருட்டு சனிக்கிழமை (26) சிரமதான பணிகளில் ஈடுப்பட்டனர்.

51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபல் புஸ்ஸெல்லெ மற்றும் 515 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பாலித கொடெல்லவத்த ஆகியோரின் வழிகாட்டுதலில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

10 வது இலங்கை பீரங்கி படை மற்றும் 2 வது கெமுனு ஹேவா படை ஆகியவற்றின் படையினர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சிரமதான பணிகளில் பங்குபற்றினர்.