Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2021 11:00:39 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக 25 வது ஆண்டுவிழாவிக்கு இணையாக அன்னதானம் வழங்கல்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 25 வது வெள்ளி விழாவினை முன்னிட்டு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து 2021 ஜூன் மாதம் 20 ம் திகதி யாழ்ப்பாணம் இனுவில் மெக்லியோட் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் உணவளிக்கப்பட்டது,

குறித்த முதியவர்களுக்கு சுகாதார பொருட்கள் உட்பட சுவையான மதிய உணவு மற்றும் பரிசு பொதிகளும் வழங்கப்பட்டன.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நிகழ்வில் பிரிகேடியர் பொது ஊழியர்கள், பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.