Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 16:09:46 Hours

மீள் அறிவிப்பு வரை பயணத்தடை நீடிக்கும்

இன்று காலை (23) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,909 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதுடன் ஏனைய 2,906 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள். அவர்களில் அதிகமாக 556 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 407 பேர் களுத்துறை மாவட்டத்திலும் 354 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 1,589 பேர் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (23) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 161,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 64,247 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள் என்பதோடு அவர்களில் 126,994 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 31,480 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு ஞாயிற்றுக்கிழமை (23) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 1,635 பேர் குணமடைந்து பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி (22) காலை வரையில் நாட்டில் பதிவான கொவிட் – 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,178 ஆக பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (23) காலை 105 பேர் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் இன்று காலை (23) 68 ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,755 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (23) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டிருக்காமையால் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கப்படும்.