Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 09:05:41 Hours

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 800 தொற்றாளர்கள்

இன்று காலை (22) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,547 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 3 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன் 6 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 33,538 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள். அவர்களில் அதிகமாக 800 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 617 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 297 பேர் குருணாகலை மாவட்டத்திலும், 1,824 பேர் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (22) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 158,332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 61,341 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள் என்பதோடு அவர்களில் 125,359 முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 31,841 வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு சனிக்கிழமை (22) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 1,828 பேர் குணமடைந்து பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 44 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி (22) காலை வரையில் நாட்டில் பதிவான கொவிட் – 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,132 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பயணத்தடை 21 மே 2300 மணி தொடக்கம்25 மே 0400 மணி வரையில் நடைமுறையில் இருந்த நிலையில் பயணத்தடை (25) 2300 மணி தொடக்கம் 28 மே 0400 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.

மேலும் இன்று (22) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டிருக்காமையால் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை.