Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2021 09:30:41 Hours

562 வது பிரிகேட் படையினரால் வவுனியா நகரில் தொற்று நீக்கம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் ஒருங்கிணைப்பில் 2021 மே 16 அன்று 562 பிரிகேட் படையினரால் வவுனியா நகரில் தொற்றி நீக்கம் செய்யும் பணிகளை முன்னெடுத்தனர்.

562 பிரிகேட் படையினரால் 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்சவின் மேற்பார்வையின் கீழ் பஸ் தரிப்பிடங்கள், ரயில் நிலையம், அரச மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், வைத்தியசாலை, வவுனியா நகரப்பகுதி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டமானது 17வது இலங்கை சிங்கப் படையினரால் பொறியியல் சேவை படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.