22nd May 2021 18:49:04 Hours
கொழும்பு மற்றும் அதனை அண்டிய இடங்களில் கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை (20) பனாகொடவிலுள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அலகுகளின் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பிட்ட பகுதிகளின் முன்னேற்றங்கள் மற்றும் புதிய தொற்றாளர்களை கண்டறிதல், நடைமுறை செயற்பாடுகள், சிகிச்சை முறைகள் மற்றும் தற்போதைய மூலோபாய செயற்பாடுகள் என்பன தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.