17th May 2021 14:51:49 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 52 வது படைப் பிரிவின் படைத் தளபதியின் மேற்பார்வையில் 52 ஆவது படைப் பிரிவின் கீ்ழ் இயங்கும் 521 பிரிகேட் படையினர் மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படியினரால் சனிக்கிழமை 15 ஆம் திகதி அச்சுவேலி பிரதேசத்தில் கிருமிதொற்று நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப் பணியானது யாழ் மக்களிடையே கொவிட் -19 வைரஸ் தொற்று விரைவாக பரவுவதைக் தடுக்கும் நிமித்தம் இடம் பெற்றது.
அதற்கமைய 521 வது பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த கட்டளை அதிகாரிகள் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.
அதன்படி, அச்சுவேலி பேருந்து தரிப்பிடம், சந்தை, வங்கி வளாகங்கள், கடைகள், முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன.