13th April 2021 03:30:22 Hours
அம்பாறை போர்க்கள பயிற்சி பாடசாலைக்கு 41 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சனத் அலுவிஹார அவர்கள் புதன்கிழமை (7) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இப் புதிய தளபதிக்கு நுழைவாயிற் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் புதிய அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தையிட்டு கடமையை பொறுப் பேற்றுக்கொண்டார். பின்னர், இந்த நிகழ்வின் நினைவாக பயிற்சி பாடசாலை வளாகத்தில் ஒரு மா மரக்கன்று நட்டுவைத்த அவர், படையினர்களுக்கு உரையாற்றினர்.
இந் நிகழ்வில் போர்க்கள பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.