24th February 2021 15:00:26 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்வதையிட்டு பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் புதன்கிழமை (24) தனது அலுவலகத்துக்கு அழைப்பித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக மூன்று தசாப்த காலமாக போராடிமை,எதிரிகளை துணிச்சலாக எதிர்கொண்டமை பற்றியும் நினைவுகூர்ந்ததுடன், பல வருடங்களாக முன்னணி வீரராகவிருந்த மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களுடன் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார். அத்துடன் மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க இராணுவத்தில் சேவையாற்றிய காலங்களில் வகித்த பதவிகள் தொடர்பாகவும் குறிப்பாக கஜபா படையணியில் சேவையாற்றியமை, வன்னியில் பணியாற்றிய சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவராக இருக்கின்றமை என்பவற்றை நினைவுகூர்ந்த இராணுவ தளபதி அர்ப்பணிப்பான சேவைக்கு பாராட்டுக்களை தனது தெரிவித்துக்கொண்டார்.
அதனையடுத்து ஓய்வுபெரும் சிரேஸ்ட அதிகாரி தளபதியின் ஊக்குவிப்புக்கும் அறிவுரைகளுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவ தளபதியிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புக்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், இறுதியாக ஓய்வுபெற்றுச் செல்லும் அதிகாரிக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நினைவு சின்னம் ஒன்றனையும் வழங்கிவைத்தார். Nike Sneakers Store | Nike