Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2021 14:25:46 Hours

ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்கவின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இலேசாயுத காலாட்படையின் பெருமைக்குரிய சிரேஸ்ட வீரர்களில் ஒருவரும் திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு அவருடைய அர்பணிப்பான சேவைக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா புதன்கிழமை (24) தனது அலுவலகத்துக்கு அழைப்பித்து பாராட்டு தெரிவித்தார்.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்பணிப்பான சேவைக்கு பாராட்டு தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, 2009 ஆண்டுக்கு முன்னர் போர்க்களச் செயற்பாடுகளையும் நினைவு கூர்ந்தார்.மேலும் உலகின் மிக இறக்கமற்ற பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகளின் போதான மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதுடன், இராணுவத்தில் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க வகித்த பதவிகள் பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதனையடுத்து ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க இராணுவ தளபதியின் பாராட்டுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இராணுவ தளபதியிடமிருந்து கிடைத்த தூண்டுதல் மற்றும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்த பின்னர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவருடைய சேவையை பாராட்டும் வகையிலான நினைவுச் சின்னத்தையும் வழங்கிவைத்தார். affiliate tracking url | THE SNEAKER BULLETIN