19th January 2021 17:45:46 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் நேற்று மாலை (17) தலங்கம பொலிஸாரின் அழைப்புக்கு அமைய தலங்கம தெற்கு பகுதியில் மண் மேட்டில் 2 பொதுமக்களை மீட்டனர்.
அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட ஒரு குழு விரைவாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது எனினும் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களில் ஒருவரை ஏற்கனவே மீட்டிருந்தனர். மற்ற ஊழியர்கள் அண்மையில் பெய்த மழை மற்றும் சேற்று நீர் காரணமாக ஈரமான மண்ணில் கடுமையாக சிக்கிக்கொண்டிருந்தார்.
எவ்வாறாயினும் இராணுவத் படையினர் அப்போது அரை உணர்வு நிலையில் இருந்த மண் மேட்டில் சிக்கியிருந்த இருந்து இருவரையும் மீட்டு தலங்கம பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
உதேஷ் கெமுனு குமார மற்றும் ஹெரால்ட் ஜூட் செபாஸ்டியன் ஆகியோர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பூமியின் மேட்டு பகுதி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது சரிந்து விழுந்தது.
14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே 04 4 அதிகாரிகள் உட்பட 14 அடங்கிய அணியின் மற்றவர்களின் பாதுகாப்பிற்கான வீர தலையீடு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டினர். Sports brands | Sneakers