Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2020 20:02:22 Hours

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கொவிட் -19 கட்டுபாட்டு நடவடிக்கைகளை பாராட்டல்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க அவர்கள் இன்று காலை 3 ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, கொவிட் -19 பணிக்குழுவின் வகிபாகம் மற்றும் துறைமுக நடவடிக்கைகளின் தற்செயல் திட்டங்கள் குறித்து கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் கலந்துரையாடினார்.

நொப்கோ பணிக்குழு, முப்படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் அவசர நடவடிக்கைகள் மற்றும் நொப்கோ தலைவரினால் முன்னெடுக்கப்படும் வகிபாகம் குறித்து கலந்துரையாடலில் பாராட்டப்பட்டதோடு, இலங்கை துறைமுக அதிகாரசபை விவகாரங்களை தொற்றிலிருந்து விடுபட்டு சீராக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கலந்துரையாப்பட்டது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் முன்முயற்சி மற்றும் வீஜயத்திற்கு நன்றி தெரிவித்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க அவர்களிடம் , இராணுவமானது கொவிட் -19 தொற்று நோய்க்கெதிரான தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்ளும் அதே வேளையில் எந்த நேரத்திலும் தேசிய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.

குறித்த சந்திப்பின் போது இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு எஸ்.பிரேமச்சந்திரன் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ செயற்பாட்டு பணிப்பாளர் திரு உபுல் ஜெயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர். Asics footwear | NIKE HOMME