Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2020 12:21:20 Hours

221ஆவது பிரிகேட் படையின் ஒங்கிணைப்பில் 49 வரியவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கல்

221ஆவது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரியந்த கரியவாசம் அவர்களின் ஒருங்கிணைப்பில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 49 வரிய மக்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (27) திருகோணமலை மாநகர சபையில் நடைபெற்றது. இதற்கான அனுசரனையானது கொழும்பு பிரன்ஸ் நீட் சொசைட்டி மற்றும் ரொட்டரி கழகம் ஆகியவெற்றினால் வழங்கப்பட்டது.

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் பிரதம அதிதியாக குறித்த சமூக திட்டத்தில் கலந்து கொண்டு அவைகளை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம சேவக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 221 படைப்பிரிவு மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், வெவ்வேறு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பிறப்பு குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் ஏனையவர்கள் இதுபோன்ற விலையுயர்ந்த செயற்கை கால்களை வாங்க முடியாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

குறித்த 49 வர்ரிய ஊன முற்றோர்களுக்கு திருகோணமலை மா நகர சபையில் வைத்து செயற்கை கால்கள் நன்கொடையாக வழங்கப்படுவதற்கு அவர்களின் முன்னர் அவர்களின் கால்களின் பருமன் அளவிடப்பட்டன. நிதியுதவி நிறுவனங்களான கொழும்பு பிரன்ஸ் நீட் சொசைட்டி மற்றும் ரொட்டரி கழகம் ஆகியவெற்றின் பிரதிநிதிகள், திருகோணமலை மேயர், 221 ஆவது பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த கரியவசம், தளபதி, 223 ஆவது பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா, 22 பிரிவின் அதிகாரிகள் மற்றும் 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் ஏனைய படையினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ