25th September 2020 17:20:40 Hours
மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்கள் பூஸ்ஸவில் அமைந்துள்ள 61 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது படைத் தளபதியாக இராணுவ சம்பிரதாய முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமையை செம்டெம்பர் 24 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக கடமை பொறுப்பேற்ற இப் படைத் தளபதியை பிரிகேட் படைப் பிரிவின் கட்டளை தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் ஆகியோரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து 14 ஆவது கெமுனு ஹேவா (தொ) படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.
பின்னர், மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்கள் செத் பிரித் வழிப்பாட்டுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை வைத்து கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர், படைப் பிரிவு தலைமையகத்தில் உள்ள அனைத்து படையினர்களுக்கு மத்தியில் உரையாற்றியதுடன், தனது பணியின் நோக்கத்தையும் விபரித்தார். பின்னர் படையினருடன் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார். பின்னர் படைத் தலைமைய வளாகத்தில் மரக்கன்றையும் நட்டு வைத்தார்.
நிகழ்வின் இறுதியில், அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரிகேட் படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரும் கலந்துகொண்டனர். . Sports Shoes | nike fashion