22nd September 2020 11:30:20 Hours
இராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் 66 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் பூநகரி 66 வது படைப்பிரிவின் படையினர் வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தில் புதன்கிழமை (16) அன்று ஒரு நல்லெண்ண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
படையினர் வன்னேரிக்குள யோகர் சுவாமிகள் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு மதிய உணவளித்தனர். அத்தோடு அவர்களுக்கு அன்றாடம் பயன்படும் பொருட்கள் அடங்கிய பரிசு பொதிகள் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரான திரு என் செல்வநாயகம் இராணுவத்தின் நல்லெண்ணத்திற்கு நன்றி பாராட்டினார். affiliate tracking url | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp