Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2020 12:00:43 Hours

மத்திய பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் ‘சிரச நிவச’வினால் மேலும் ஒரு விடு நிர்மானிப்பு

எத்திமலை பிரதேசத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்திற்கு ‘சிரச வானொலி நிவச' திட்டத்தின் மூலம் புதிய வீற்டினை நிர்மானிப்பதற்கான திறமையான மனித வளம் தொழில்நுட்ப நிபுணத்துவத்துவத்தினை, பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல்களின் மத்திய பாதுகாப்பு படையினர் வழங்கினர்.

இந்த திட்டமானது சிரச நிறுவனத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒளிபரப்பாளர் திறமையான இராணுவ படையினர்களுடன் இணைந்து ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டும் திட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். 'சிரச'வினால் இராணுவ உதவியை நாடிய பின்னர், இராணுவத் தளபதி இதுபோன்ற இன்னும் சில திட்டங்கள் முன்னரும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

எத்திமலையில் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட புதிய 'சிரச நிவச' திட்டத்தின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட வீடானது (15) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

எம்டிவி / எம்பிசி, 'சிரச மீடியா வலையமைப்பின் குழுப் பணிப்பாளரான திருமதி நீத்ரா வீரசிங்க, 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 121 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி கேணல் உதய சேரசிங்க, சிரச தொலைக்காட்டசியின் சில நிறைவேற்று அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகளின் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பயனாளிகளுக்கு இந்த வீடு வழங்கப்பட்டது. Best Authentic Sneakers | Nike Shoes