17th September 2020 10:18:23 Hours
முல்லைத்தீவு 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 642 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் வரிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் செவ்வாயக்கிழமை 15 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு செல்ல தகுதியான இரண்டு வரிய மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். குறித்த அன்பளிப்பானது வெளிநாட்டில் வதியும் நன்கொடையாளர்களினூடாக ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பிரகாரம் ,கனடாவில் இருந்து வருகை தந்த திரு சுப்ரமணியம் ரவிந்திரதாஸ் மற்றும் திரிமதி சிரோமலா விக்ரமசிங்க ஆகியோரினால் 23 ஆவது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஏ.பி.எஸ் அதுகொரல அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த மாணவர்களின் உயர் கல்விற்காக அனுசர னை வழங்கப்பட்டது.
64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் அஜித் பலலெவல அவர்கள் பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நிதி அன்பளிப்பினை வழங்கினார்.
642ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன விஜேசூரிய அவர்களின் மேற்பார்வையில் 23 ஆவது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி அவர்களினால் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது. Sports News | Nike Air Max