Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2020 12:00:59 Hours

புயலால் சேதமடைந்த பொதுமக்களின் வீடுகள் 143 ஆவது படைப் பிரிவின் படையினர்களால் சீர் திருத்தும் பணிகள்

143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மல்லவபிட்டி பிரதேச செயலகத் பிரிவுட்குட்பட்ட மகாகமாவின் பிரதேசத்தின் குருனாகல மாவட்ட செயலகப் பகுதியிலுள்ள அத்தனபிட்டிய கிராமத்தில் சீரற்ற காலநிலையின் காரணமாக சேதமடைந்த கூரைகள் மற்றும் பொது மக்களின் இயல்புநிலையை கருத்திற் கொண்டு படையினரால் வியாழக்கிழமை (6) ஆம் திகதி சீர் திருத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

அதன் பிரகாரம் படையினரால் உடனடியாக பாதிக்கப்பட்ட 20 வீடுகளை புனரமைத்து, புதுப்பித்தல் முடியும் வரை பொதுமக்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல பொதுமக்களுக்கு உதவின. புயலால் இரு பிரிவுகளுக்கும் சேதம் சேதமடைந்ததையடுத்து அதே பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் பாடசாலைகளை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.

143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் (6) ஆம் திகதி வியாழக்கிழமை மழை பெய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்க, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் ஒருங்கிணைப்பில் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் மீள் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Best Authentic Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping