Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd July 2020 09:00:57 Hours

இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் புதிய டெனிஸ் கூடம் திறந்து வைப்பு

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாய் நிர்மானிக்கப்பட்ட டெனிஸ் கூடம் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இன்றைய தினம் (22) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியும், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த கூடத்தை திறந்து வைத்தார்.

இந்த டெனிஸ் கூடமானது இலேசாயுத காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அநுர திசாநாயக மற்றும் கேர்ணல் துல்ஷார தர்மசேன போன்ற உயர் அதிகாரிகளின் பூரன தலைமையில் நிர்மானிக்கப்பட்டன.

இந்த கூடம் திறந்து வைக்கப்பட்டு முதல் கட்டமாக இந்த டெனிஸ் கூடத்தில் படையினருக்கு இடையிலான போட்டிகள் இடம்பெற்று இந்த போட்டியில் வெற்றியீட்டிய படையினருக்கு இராணுவ தளபதி அவர்களினால் பரிசுகள் வழங்கி வைத்து படையினர் மத்தியில் கூட்டுப் பொறுப்பு மற்றும் ஒருவரின் உடல் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பாகவும், விளையாட்டின் முக்கியதுவத்தை பற்றி உரையையும் நிகழ்த்தினார்.

மேலும் அன்றைய தினம் இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்வில் இராணுவ தளபதி அவர்கள் இணைந்து கொண்டு இலேசாயுத காலாட் படையணியின் மூத்த அதிகாரிகளுடன் விநோதமாக காலத்தை களித்தார். இறுதியில் இராணுவ தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

இந்த விருந்தோம்பல் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இராணுவ தளபதியை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வரவேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | adidas NMD Human Race