02nd July 2020 20:16:42 Hours
புதிய அறிவு மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் முகமாக, 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ்.செனரத் யாபா அவர்களின் தலைமையில் 3 ஆவது கஜபா படையணியின் படையினருக்கு 'தலைமைத்துவம் மற்றும் உந்துதல்' தொடர்பான பயிற்சி பட்டறை இடம்பெற்றது.
இந்த பட்டறையில் படையினர்களின் அணுகுமுறைகள், செயல்பாடு மற்றும் செயல்படாத நடவடிக்கைகள், தற்போதைய சூழ்நிலை, ஒரு சிப்பாயின் அடிப்படை கடமைகள், விழிப்புணர்வு, தேசிய மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கி நிகழ்த்தப்பட்டது.
சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கான நுட்பங்கள் சூழ்நிலைகளின் வளர்ச்சியின் பின்னணியில் ஆழமாக விவாதிக்கப்பட்டன மற்றும் தகவமைப்பு, தற்போதுள்ள சூழலுக்குள் விரைவான மாற்றம் போன்றவற்றில் படையினரின் சிந்தனை திறன் மேம்படுத்துபடுகின்றன.
57 ஆவது படைப் பிரிவின் கேர்னல் தரத்திலிருக்கும் உயரதிகாரி, கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் 3 கஜபா படையணியின் படையினர்களும் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.
இதற்கிடையில், அடிப்படை புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்) கண்காணிப்பைப் பயன்படுத்துவதற்கான ஒரு பட்டறை, மற்றும் அதனுடன் தொடர்புடைய பயன்பாடுகள் ஜூன் 29 அன்று 57 பிரிவில் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான கட்டளை பட்டாலியன்கள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு இந்த பயிற்சி பட்டளை நடத்தப்பட்டன.
வரைப்படம் மற்றும் தரவு சேமிப்பு முறைகளின் அடிப்படையில் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் அதே நேரத்தில், அவர்களின் அறிவை மேலும் மேம்படுத்துவதற்காக 'ஜீனியர் தலைவர்களுக்கான தகவமைப்பு தலைமை பயிற்சி' என்ற தலைப்பில் மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கணினி இயக்குனர்கள், உட்பட 06 அதிகாரிகள் மற்றும் 25 படையினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | nike