04th July 2020 20:57:01 Hours
சிவில் மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் பொதுக் கட்டுப்பாடுகளை அடையாளம் காண்பதற்காக அரச அதிகாரிகள் மற்றும் கிராம வாசிகளின் மற்றும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் ஒருங்கினைப்பு கூட்டமானது இம் மாதம் வெள்ளிக்கிழமை (03) ஆம் திகதி பள்ளிநகரில் அமைந்துள்ள 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை முகாமில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
மந்தை கிழக்கிற்கான பிரதேச செயலாளர், மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி , மாங்குள மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் , மாங்குள நீர்ப்பாசனத் துறையின் தலைமை பொறியியலாளர் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உட்பட பல தொடர்புடைய அரசு அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 653 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, சிவில் ஒருங்கினைப்பு அதிகாரிகள் , 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | NIKE AIR HUARACHE