01st July 2020 16:52:00 Hours
இலங்கை இராணுவத்தின் வளர்ச்சி நிமித்தம் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை மறக்காமல் இலங்கை இராணுவ தலைமையகத்திலுள்ள பதவிநிலை கடமைகள் பணியகத்தினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பரிந்துரைப்பின் கீழ் இராணுவத்திலுள்ள அனைத்து படையணிகளுள்ள படையினர் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து படையணி தலைமையகங்களிலுள்ள நிர்வாக கிளையினரின் கண்காணிப்பின் கீழ் சரியான ஒருங்கினைப்பின் கீழ் இவர்களது தேவைகள் பூர்த்தி செய்து இவர்கள் இணைக்கப்படுவர்.
இது தொடர்பாக பதவிநிலை கடமைகள் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விஜயசுந்தர அவர்களது தலைமையில் அனைத்து படையணிகளிலுள்ள மத்திய கட்டளை தளபதிகளின் தலைமையில் ஒருங்கினைப்பு கூட்டம் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த கூட்ட கலந்துரையாடலின் போது முன்னாள் இராணுவத்தினிலிருந்த விஷேட தேவையுடைய படை வீரர்களும் இணைக்கப்படுவதற்கான விடயங்களும் ஆராயப்பட்டன.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Nike sneakers | Nike Off-White