Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 18:00:19 Hours

5,038 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

முப்படையினால் நிருவகிக்கப்படும் கன்னொவை (ஐ.டி.ஐ) (41), விவசாய விடுமுறை விடுதி - கன்னொவை (01) தேசிய கட்டிடம் – குண்டசாலை (01) கூட்டுறவு கட்டிடம் – பல்லேகலை (01) மற்றும் ஹோட்டல் புளூ வோட்டர் (26) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தங்களது வீடுகளுக்கு இன்று 01 ம் திகதி பிற்பகல் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றுவரை (01) முப்படையினரால் நிருவகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மொத்தம் 11,558 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ற்போது வரை 5,038 பேர் நாடு முழுவதும் உள்ள 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர், இன்றுவரை (01) மொத்தம் 754 கடற்படை வீர்ர்கள் கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 04 கடற்படை வீர்ர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 411 பேர்கள் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் வெளியேறியுள்ளனர். 343 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். buy footwear | adidas Yeezy Boost 350