26th May 2020 20:10:31 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் தேவையுடை மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் தந்திரிமலை துப்பிட்டியாவவில் வசிக்கும் திரு எஸ்.பி. லயனல் செனவிரத்னவிற்கு வழங்குவதற்கான புதிய வீட்டின் அடிகல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 26 ஆம் திகதி இடம்பெற்றது.
இவ் வீடற்ற பயனாளி நான்கு பிள்ளைகளுடன் அடிப்படை வசதிகள் இன்றி பல கஷ்டங்கள் மத்தியில் வாழ்வதை கருத்திற்கொண்டு 212 ஆவது படைத் தளபதி அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நன்கொடையாளி திரு மலின் ராஜபக்ஷ அவர்களினால் வீட்டுக்கான நிதி வழங்கப்பட்டது. வீட்டுக்கான அடிக்கல்212 ஆவது படைத் தளபதியால் நாட்டப்பட்டது.
இப் பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் 212 ஆவது படையின் வழிகாட்டுதலின் கீழ் 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந் நிகழ்வில் 212 ஆவது படை கட்டளை தளபதி கேர்னல் அனில் பீரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் 212ஆவது படை சிரேஷ்ட அதிகாரிகள், 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி, பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் Sports brands | Air Jordan