26th May 2020 14:30:13 Hours
இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும், இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் திருகோணமலை 4 வது படைக்கலச் சிறப்பணிக்கு 25ம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தார்.
அதன் போது படைத் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டளைய அதிகாரிக்கான வாசஸ் தலத்தினை திறந்து வைத்து மாங்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். அதன் பிறகு அதிகாரிகளுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டார்.
04 வது படைக்கலச் சிறப்பணியில் உரையாற்றும் போது அதிகாரிகளும் படையினரும் தொழில் ரீதியிலான நேர்மை நல்லொழுக்கங்களோடு ஒரு அணியாக செயற்படும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் போர்கள நடவடிக்கையில் பெற்றுகொடுத்த பங்களிப்பிற்கு நன்றி பாராட்டினார்.
கர்னல் கமாண்டன்ட், தோழர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பிரிவின் ஆண்களின் நேர்முகத்தேர்வுகள் மற்றும் பிற அணிகளின் தோழர்கள் மற்றும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 4 SLAC துருப்புக்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார், குறிப்பாக போர் நடவடிக்கைகளின் போது. 4 எஸ்.எல்.ஐ.சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் பி தனித்துவமான ற அணிகளுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியானகே அன்றைய தினம் 25 ம் திகதி 06 படைக்கலச் சிறப்பணி தலைமையகத்திற்கும் விஜயம் செய்தார். அங்கு விஜயத்தின் அடையாளமாக மர நடுகையிலும் தேனீர் விருந்திலும் பங்குபற்றினார். நிகழ்வு கொவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தரமான நடைப்பெற்றது.
மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியானகே, படையின் பெருமையை எந்நாளும் உயர வைத்திருக்க வீரர்களின் திறன்கள் மற்றும் பண்புகளும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் அபிவிருத்தி அடைய வேண்டும் என வலியுறுத்தினார்.
விஜயத்தின் போது அப்பகுதியில் உள்ள இரு பௌத்த மகா தேரர்களையும் சந்தித்து ஆசிப் பெற்றார். trace affiliate link | Jordan Ανδρικά • Summer SALE έως -50%