20th May 2020 10:30:26 Hours
இராணுவத் தளபதியின் ‘துரு மிதுரு நவ ரடக்' விவசாய மற்றும் அழகுபடுத்தும் திட்டத்திற்கு இணங்க, தியதலாவையில் உள்ள இராணுவ பயிற்சி கட்டளையில் (ARTRAC) சனிக்கிழமை (16) “பசுமைப்படும் இராணுவ பயிற்சி கட்டளை” திட்டம் தொடங்கியது.
இத்திட்டத்தில் இராணுவ பயிற்சி கட்டளையின் படையினரால், புன்னை மரம், நாவல், கருவேல மரம், மருதை போன்ற 500 அரிய வகை மூலிகைகள் மற்றும் மரக்கன்றுகளை நாட்டினர்.
இராணுவ பொது மனித வலு பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்சஜய அவர்களால் மாங்கன்றை நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இராணுவ பயிற்சி கட்டளையின் பிரிகேடியர் பயிற்சி, பிரிகேடியர் JMC ஜயவீர, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் பங்கேற்றனர். Nike air jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer