16th May 2020 23:40:31 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் 12 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் , யாழ்பாணத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிரான முன் பாதுகாப்பு நடவடிக்கையாக முழு அரியாலை பிரதேசத்தையும் சனிக்கிழமை 16 ஆம் திகதி தொற்று நீக்கம் செய்தனர்.
தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள்,பொது இடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் படையினரால் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 12 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. Best Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov