15th May 2020 18:52:47 Hours
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் புதன்கிழமை 13 ஆம் திகதி இலங்கை படைக்கலச் சிறப்பணியின் 5ஆவது உளவுத்துறை படையணிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
விஜயத்தை மேற்கொண்ட அவர் படையினர் மத்தியில் உரையாற்றியதோடு, மர நடுகையிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, அனைத்து அதிகாரிகள் மற்றும் படைக்கலச் சிறப்பணியின் 5ஆவது உளவுத்துறை ஏனைய படையினர் உள்ளிட்டோர் கோவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட்-19தொடர்பான படையினரின் பொறுப்புகள் குறித்து அவர் வலியுறுத்தினார், மேலும் சீருடையில் ஒரு மனிதர் தேசிய சாதனைகளை நிறைவேற்றுவதில் சக ஊழியர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நாட்டிற்கான கடமைகள். தேசத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை படைக்கலச் சிறப்பணியின் 5ஆவது உளவுத்துறை படையணிக்கு அவர் தனது சிறப்பு அஞ்சலியினை செலுத்தினார்.
அதே சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் 5ஆவது உளவுத்துறை படையணிக்கு 9 வருடங்களுக்கும் மேலாக அர்பணிப்பு சேவையினை வழங்கிய பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த படைவீரரின் விஷேட தேவையுடைய மகளுக்காக அவரிடம் ஒரு சிறப்பு கோ-வண்டியினை அடையாள பரிசாக வழங்கினார். Sportswear free shipping | Air Jordan