08th April 2020 13:00:36 Hours
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் இந்துநில் பத்திரன அவர்களை, பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவழைத்து 8 ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து அவரின் சேவையினை பாராட்டும் முகமாக சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார்.
மேஜர் ஜெனரல் இந்துநில் பத்திரன அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு வழங்கிய பங்களிப்பினை லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாராட்டியதோடு, அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு கடந்தகால நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரி, இராணுவத் தளபதியின் பாராட்டிற்கும் சிந்தனைக்கும் தனது நன்றியினை தெரிவித்தார். இறுதியில், லெப்டினன் ஜெனரல் சில்வா ஓய்வு பெற்றவருக்கு அவரது பாராட்டுக்கு அடையாளமாக ஒரு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார்.
மேஜர் ஜெனரல் இந்துநில் பத்திரன அவர்கள் தனது சேவைக்காலத்தில் பல கட்டளை மற்றும் பதவி நிலை நியமனங்களை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Nike Sneakers Store | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News