Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2020 10:31:41 Hours

21 ஆவது படைப் பிரினரால் விதவைக்கான வீடு நிர்மாணிப்பு

21 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்குற்பட்ட 212 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5 வெது இலங்கை தேசிய படையணியின் படையினரால் தந்திரிமல,கட்டுகெலியவ பிரதேச வரிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளையுடைய விதவைக்கான வீடு கட்டப்பட்டு மார்ச் 14 ஆம் திகதி திறந்து வைக்கப்ப ட்டது.

21 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜனர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் முயற்சியில் அநுராதபுர வைத்தியசாலையின் வைத்தியர் மதுசங்க கொஸ்தா அவர்களினால் இந்நிர்மாணிப்புக்கான மழு அனுசரணையானது வழங்கப்பட்டது. இவ்வீட்டின் திறப்பு விழாவிற்கு மேஜனர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பிரகாரம் பிரதம அதிதியாக வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் பயனாளிகளுடன் இணைந்து வீட்டினை திறந்து வைத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடானதுருப்பிட வசதி, உணவு அறை,படுக்கை அறை,குளியலறை, சமயலறை மற்றும் குடிநீர் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளத . அதே நிகழ்வில் பயனாளியான திருமதி வை.எம். மனோரா குமாரி அவர்களுக்கு அத்தியவசியமான வீட்டு உபகரணங்கள் மற்றும் மின்சார பொருட்கள் மற்றும் தளபாட வசதிகள் உட்பட வழங்கப்பட்டன.

சம்பிரதாய முறைப்படி இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், நன்கொடையாளி,அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். buy footwear | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth