Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2020 06:31:41 Hours

கோவிட்-19 தொடர்பாக மேற்கு பாதுகாப்பு படையினருக்கு இடம் பெற்ற விரிவுரை

கோவிட்-19 வைரஸ் பவுதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழவானது,மேற்கு பாதுகாப்பு படையினருக்கு புதன் கிழமை 18 ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் சந்திமால் வெலகெதர அவர்களினால் நடாத்தப்பட்டது.

பனாகொடை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வில், தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனை நடவடிக்கை, நேரடி செயற்பாடுகள், கோடப்பாட்டு விடயங்கள் போன்றன இடம் பெற்றன.

இந்த விரிவுரையில் பணிப்பகம், படையணி, பட்டாலியன் மற்றும் இராணுவ பாசறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Nike Shoes