Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2020 15:00:28 Hours

திருமண நிகழ்வில் இணைவு

கம்புருபிடிய அபிமங்சள மத்திய நிலையத்தில் உள்ள விஷேட தேவையுடைய படை வீரரரது திருமண வைபவமானது இம் மாதம் (12) ஆம் திகதி வாதுவ லாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த இராணுவ வீரரானவர் 13 வருடங்கள் காத்திருந்த மனைவியை கைபிடித்துக் கொண்டார்.

10 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த சாஜன் பி.டீ.பி பதிரன அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது சுகந்திபுரம் பிரதேசத்தில் எல்டிடிஈ தாக்குதலுக்கு இலக்காகி காயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வி சிறியானி சந்தயா குமாரி அவர்களை திருமணம் முடித்துக் கொண்டார்.

இந்த திருமண நிகழ்விற்கு பிரதம அதிதியாக சமிக்ஞை படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் வருகை தந்து அவரது தலைமையில் இந்த திருமணத்தை நடாத்தி வைத்தார்.Sports Shoes | Releases Nike Shoes