Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2020 21:22:55 Hours

கஹஹொல்ல மற்றும் தியதலாவை போன்ற பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பரிசோதனை நிலையங்கள் அமைப்பு

‘கோவிட்- 19’ வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்காக அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இலங்கை இராணுவமானது ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது ஆலோசனைக்கமைய கஹஹொல்ல மற்றும் தியதலாவை இராணுவ தள வைத்தியசாலை வளாகத்தினுள் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பரிசோதனை நிலையங்கள் இம் மாதம் (12) ஆம் திகதி நடைமுறைபடுத்தும் முறையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட பரிசோதனை நிலையங்கள் இராணுவ நிவாரண வைத்திய மற்றும் மனநிலை சுகாதார சேவை பணியகத்தின் பிரதி பணிப்பாளர் கேர்ணல் (வைத்தியர்) சவீன் சேமகே அவர்களது தலைமையில் விஷேட வைத்திய குழுவினரது பங்களிப்புடன் புனானை, கண்டகாடு, கஹகல்ல மற்றும் தியதலாவை போன்ற பிரதேசங்களில் உள்ள மத்திய நிலையங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது பரிந்துரைப்பின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இந்த நிலையங்களுக்கான ஒத்துழைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன. Sports Shoes | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5