Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2020 10:10:08 Hours

இராணுவ பயிலுனர் பயிற்சி முகாமிற்கு முதலாவது கட்டளை அதிகாரி நியமிப்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் கே.எம்.டீ.ஐ.பி கமல்ஹொட அவர்கள் புத்தளத்தில் அமைந்துள்ள இராணுவ அடிப்படை பயிலுனர் பயிற்சி முகாமிற்கு முதலாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவர் தனது புதிய பதவியை இம் மாதம் (6) ஆம் திகதி பயிற்சி முகாமில் உத்தியோகபூர்வமாக ஆவணத்தில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பயிற்சி முகாமானது இராணுவ பயிற்சி பணியகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும் ஒரே தடவையில் 1500 பயிலுனர்களுக்கு இந்த பயிற்சி முகாமில் பயிற்சிகளை வழங்கி வைக்க கூடிய வசதிகளை கொண்டுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கட்டளை அதிகாரியவர்கள் பயிற்சி முகாம் வளாகத்தினுள் மரநடுகைகளையும் மேற்கொண்டார். Running Sneakers Store | Air Jordan